21.10.2021 மலேசியத் தமிழ்க்கல்வி நாள் நல்வாழ்த்துகள்

டத்தோ ப.கமலநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி மலேசியத் திருநாட்டில் 21.10.1816ஆம் நாள் அதிகாரப்படியாகத் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டது என்று ஆவணங்கள் உறுதிபடுத்துகின்றன. பினாங்கில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்க்கல்வி தொடங்கியது. அதற்கு முன்னர் பல ஊர்களில் பல தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டுள்ளன. ஆயினும் அப்பள்ளிகள் முறையாகப் பதிவு பெற்றிருக்கவில்லை. தனிநபர்கள், இயக்கங்கள், தோட்ட முதலாளிகள்