
மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 2020இல் 204 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. அந்த வரலாற்றினைக் கொண்டாடும் அதே வேளையில் அடுத்துவரும் ஆண்டுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பணிகளையும் நாம் சிந்திக்க வேண்டும்; சீரிய முறையில் செயல்பட வேண்டும்.